உள்நாடு

 நீர் விநியோகம் தடைப்படலாம்

(UTV | கொழும்பு) –  நீர் விநியோகம் தடைப்படலாம்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி அவர் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தொழில்சார் நடவடிக்கையினால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன் காரணமாக நீர் விநியோகம் தடைபடலாம் எனவும், இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை இராணுவத்திற்கு சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் சைனபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு

மின்வெட்டு நேரத்தில் குறைப்பு

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு