உள்நாடு

QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) –    QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க NFP தரவு பகுப்பாய்வு செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.”

அது அவ்வாறு இருக்க, எதிர்வரும் தமிழ் – சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்போன்றினை விடுத்திருந்தது.

மேலும், தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த 21ம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாளுக்கு நாள் கருத்துக்களை ஏட்டிக்கு போட்டியாக தெரிவித்து வருவதால் தாம் எதை நம்புவது என பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையர்கள் ஹஜ்ஜில் கலந்து கொள்ள மாட்டார்கள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த தொண்டமான்

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை