உள்நாடு

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை

(UTV | கொழும்பு) –  மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை

நாளை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

நடைபெறும் , உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் தமது வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் நாளைய தினம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது அவசரமான விடயம் என்பதனால் அதனை ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல என நீதிபதி யசந்த கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா