உள்நாடு

doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(UTV | கொழும்பு) –  doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி (குருணாகல் வைத்தியசாலை) உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மே 16 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

அடிப்படை உரிமை மீறல் மனு இன்று ( 25) நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலானா எஸ். துறை ராஜா மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போதே இவ்வாறு எதிர்வரும் மே 16 ஆம் திகதி இம்மனுவை பரிசீலிக்க நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த கித்சிறி ஜயலத், சி.ஐ.டி. பணிப்பாளர் , பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

டாக்டர் ஷாபி வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என அறிவிக்குமாறும் , எந்த நியாயமான காரணிகளும் இன்றி தான் கைது செய்யப்பட்டமையை சட்ட விரோதமானது என தீர்ப்பளிக்குமாறும், மனுதாரர் கோரியுள்ளார்.

இந்நிலையிலேயே மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் மே 16 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மனுதாரருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சட்டத்தரணி ஹபீல் பாரிசுடன் ஆஜரானமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாம் அப்பாவிகள் – நாமல்

editor

போலி வேலை வாய்ப்பு பணியகத்தினை சுற்றி வளைத்தது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு