உள்நாடு

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது தவணையின் இரண்டாவது கட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –   2022 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளினதும் மூன்றாவது தவணையின் இரண்டாவது கட்ட விடுமுறை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு தனது ஊடக அறிக்கையொன்றினூடாக இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளினதும் மூன்றாவது தவணையின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாவது தவணையின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி திங்கட் கிழமை நிறைவடைகின்றது.
இதனடிப்படையில் மூன்றாவது தவணையின் மூன்றாவது கட்டம் அடுத்த மாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாட்சி விசாரணைகள் நிறைவு

40ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!