உள்நாடு

கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை

(UTV | கொழும்பு) –  கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை

திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ✔ திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா 50,000 ரூபாய் மற்றும் 3,5,000,00 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 14 பிணைப் பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், ஒரு வழக்கில் மாத்திரம் பிணை வழங்க மறுத்துள்ளார். அதன்படி, திலினி பிரியமாலியை வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

✔ ஜானகி சிறிவர்தனவுக்கு எதிரான 03 குற்றச்சாட்டுகளுக்காக தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் ஜானகி சிறிவர்தனவை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,028 பேர் கைது

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள் – கைது.

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்