உள்நாடு

 கொழும்பில் சில பகுதிகளில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) –  மாளிகாவத்தையில் பொலிஸார் சுற்றி வளைப்பு
மேலும் சில பகுதிகளிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.

கிராண்ட்பாஸ் ,மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் நேற்று (11) இரவு சுற்றிவளைப்பின் போது ,பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 10 பேர், 01 கிராம் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 04 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சா கலக்கப்பட்ட மாவா 02 கிலோ 72 கிராம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர்கள் இன்று (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடு திரும்பியுள்ள பஷிலிற்கும் , ஜனாதிபதியிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

பொன்சேகா இராஜினாமா – ரவூப் ஹக்கீம் நியமனம்!

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு