உள்நாடு

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

(UTV | கொழும்பு) –   டெங்கு அபாய பிரிவாக 41 சுகாதார வைத்திய பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது

நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ,
கம்பஹா மாவட்டத்தில் 390நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிகளவான டெங்கு நோய் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 27,844 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே கண்டறியப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயின் பரவலைக் கருத்தில் கொண்டு, 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாய வலயங்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது – ரணில் விக்ரமசிங்க.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று