உள்நாடு

“நாட்டு மக்களின் பிரச்சினைகளில் உணர்வற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்”

(UTV | கொழும்பு) –   நாட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்திரமான வேலைத்திட்டத்துடன் வறிய சமூகத்திற்காக எழுந்து நிற்கக்கூடிய சட்டத்தை மதிக்கும் தலைமைத்துவத்தினால் மட்டுமே நாட்டின் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முன்பெல்லாம் பிரதேச சபை முறை இருந்தது. நாம் பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்கும் போது அவர் தனது பிரதேச மக்களை முடிந்தவரை கவனித்துக்கொள்கிறார். இப்போது அவ்வாறில்லை. மாவட்டம் முழுக்க சென்று வாக்கு கேட்க வேண்டும். வாக்களித்த மக்களை ஆட்சிக்கு வந்தவுடன் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அன்புள்ள மக்களே, இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இந்த நாட்டு மக்களை உணர்வுடன் கையாளக்கூடிய தலைமைக்கு மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.”

Related posts

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

பிரிட்டனின் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு!

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு