உள்நாடு

“பெற்றோர் மீது தேவையற்ற சுமை இல்லை” – கல்வி அமைச்சு

(UTV | கொழும்பு) – கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்கள் தவிர்ந்த சிறுவர் ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா பணம் வசூலிப்பதைத் தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கல்விச் செயலாளர், குறிப்பாக அதிபர்கள் கடுமையான நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் தேவையற்ற சுமைகளை அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

சமீப நாட்களாக, பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் பலவிதமான பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related posts

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் வர்த்தமானி வெளியானது