உள்நாடு

ரணிலுக்கு பிரித்தானியாவில் அமைச்சரவை அமைச்சர் பதவி

(UTV | கொழும்பு) –  ரணிலுக்கு பிரித்தானியாவில் அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைத்தது

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜயவர்த்தனவை புதிய சுற்றுச்சூழல் அமைச்சராக நியமித்துள்ளார்.

சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான துறையை வழிநடத்துவதுடன், பிரிட்டனின் உணவு மற்றும் விவசாயக் கொள்கைக்கும் அவர் பொறுப்பாக இருப்பார்.

சர்வதேச வர்த்தக திணைக்களத்தில் முன்னர் இளநிலை அமைச்சராக இருந்த ரணில் ஜயவர்த்தனே, புதிய பிரதம மந்திரி ட்ரஸின் உயர்மட்ட ஆதரவாளர் ஆவார்.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ரணில் ஜயவர்தன தனது புதிய பதவி தொடர்பில் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

“சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான மாநிலச் செயலாளராக இருப்பது ஒரு பாக்கியம். உணவுப் பாதுகாப்பு மற்றும் பிரிட்டிஷ் விவசாயிகளை ஆதரிப்பது முதல் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் நமது கிராமப் பொருளாதாரத்தை வளர்ப்பது வரை நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று எனக்குத் தெரியும். நமக்கு உணவு எங்கிருந்து வருகிறது? அதை அங்கீகரிப்பது முக்கியம்.”

Related posts

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு