உள்நாடு

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களை PTA விதியின் கீழ் கைது செய்யவில்லை

(UTV | கொழும்பு) – ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எதன் அடிப்படையில் இந்த தன்னிச்சையான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

அரச போராளிகள், அரச பயங்கரவாதம் மற்றும் மக்களை தன்னிச்சையாக கைது செய்வதை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவை கோரும் அதேவேளையில், எதிர்க்கட்சிகள் அதற்கு தயாராக இருக்கும் நிலையில், ஜனநாயக விரோத மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, நேற்றைய போராட்டத்தின் போது யாராவது கைது செய்யப்பட்டிருந்தால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதில் நம்பிக்கை இல்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை

சிறைக்கைதிகளை பார்வையிடும் நேர ஒதுக்கீடு தொடர்பிலான அறிவிப்பு