உள்நாடு

‘இலங்கைக்கு ஒரு இருண்ட நாள் வேண்டாம்’ – மேரி லோலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் தடுப்புக் காவல் உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா ஹிமி ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். அவர்களின் தடுப்புக் காவலில் கையெழுத்திட வேண்டாம் என்று நான் ஜனாதிபதி ரணிலைக் கேட்டுக்கொள்கிறேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு ஒரு இருண்ட நாளாகும்…” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வக்கட்சி மாநாட்டில் தமிழ் தேசியகட்சிகள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் …

நல்லடக்கமா எரிப்பா பிரச்சினையின் போது ரணிலும், அநுரவும் கோட்டாபயவுக்கு பயந்து மெளனம் காத்தனர் – முஸ்லிம் மக்களுக்காக அன்று நாம் வீதிக்கிரங்கினோம் – சஜித்

editor

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம் வெளியானது