உள்நாடு

சுயேச்சைக் கட்சிகளின் புதிய கூட்டணியின் தலைமை விமலுக்கு

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி சுயேச்சைக் கட்சி ஐக்கியத்தின் புதிய கூட்டணி அறிமுகம் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சுதந்திரக் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய கூட்டணியின் தலைவர் பதவி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

ஹெரோயினுடன் இருவர் கைது