உள்நாடு

ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பின் அடிப்படையில் 19வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பாராளுமன்ற கண்காணிப்பு குழு முறையை மீள அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

29 ஜூலை 2022 திகதியிட்ட PS/PCA/03/02 என்ற எண்ணைக் கொண்ட குடியரசுத் தலைவரால் எழுதப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகளுக்குப் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமென கட்சியின் தலைவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No description available.

Related posts

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

செயற்கை முட்டை விற்பனை தொடர்பாக மக்களிடம் வேண்டுகோள்!

ஹம்பாந்தோட்டை மேயர் பதவி இராஜினாமா