உள்நாடு

அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யும் முயற்சிக்கு எதிராக 1,640 பேர் கையெழுத்திட்ட விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மக்கள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்காற்றி மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கும் கத்தோலிக்க குருக்கள்,

1640 சகோதர சகோதரிகள் கையெழுத்திட்ட விசேட அறிவிப்பு ஒன்றினை நேற்று (31) வெளியிட்டிருந்தது.

இந்த மக்கள் போராட்டத்தில் தாங்களும் அங்கம் வகிக்கிறோம் என்று கூறும் அருட் சகோதரிகள், அருட்தந்தைகள், போராட்டத்தில் போராடி அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அதை விட்டு அவர்களை கைது செய்து ஒடுக்கும் நடவடிக்கை அல்ல, மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கண்டறிவதற்கே என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் போராட்டங்களின் அடக்குமுறை அதிகரித்ததுடன் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் பேச்சு சுதந்திரம் நசுக்கப்பட்டதுடன் தன்னிச்சையான கைதுகளும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு சக குடிமக்கள் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம் என்று இந்த அறிவிப்பு மேலும் குறிப்பிடுகிறது.

ஜூலை 25 அன்று, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மற்றும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்தது.

கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் மதகுருமார்கள் வெளியிட்ட அறிவிப்பு கீழே உள்ளது;   

முழுமையான அறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்

Related posts

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

தபால் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக வாசு கருத்து