உள்நாடு

மஹிந்த – பசில் ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முன்னாள் அரச அதிகாரிகளும் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை பயணத் தடையை நீட்டித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் 2022 ஜூலை 28 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஜூலை 15 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

இரண்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) மற்றும் மூன்று பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்யுமாறு கோரி TISL நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்தது.

Related posts

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்தக் காரணமும் இல்லை

🔴 BREAKING : புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்