உள்நாடு

மீண்டும் தலைதூக்கும் கொவிட்

(UTV | கொழும்பு) – இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் 6 அல்லது 7 இல் இருந்து 40 முதல் 50 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் -19 நோயாளர்களை அடையாளம் காண தினமும் சுமார் 1,000 பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, அண்மைய நாட்களில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அப்பட்டமாக அதிகரித்துள்ள அதேவேளை, சில நாட்களுக்கு ஒருமுறை, இலங்கையில் கொவிட்-19 தொடர்பான மரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புடன், சுகாதார அமைச்சகம் COVID-19 தொடர்பான தொழில்நுட்பக் குழுவைச் செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அலுத்கே கூறினார்.

தற்போதைய பொருளாதார சூழலில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டால், அது கை மீறிப் போகும் நிலையாகும் என்றார்.

தற்போது பல நாடுகளில் ஒரு புதிய கொவிட் மாறுபாடு வேகமாக பரவி வருவதை இலங்கை புறக்கணிக்க முடியாது என்று டாக்டர் ஹரித அலுத்கே கூறினார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளை முதல்

ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் – தமிழ் பெண் விளக்கமறியலில்

ஜனாதிபதி இராணுவத் தலைமையத்திற்கு திடீர் விஜயம்