உள்நாடு

இராஜினாமாவை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக நேற்று இரவு அந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 38வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவதன் மூலம் பதவி விலக முடியும்.

Related posts

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்துக்கு உத்தரவு

editor

ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்