உள்நாடு

இன்று 2,000 பேருந்துகள் மட்டுமே சேவையில்

(UTV | கொழும்பு) – மொத்தமுள்ள 18,000 தனியார் பேரூந்துகளில் நேற்று ஆயிரம் பேரூந்துகளே இயங்கியதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

போதிய எரிபொருள் இல்லாததாலும், தொண்ணூறு சதவீத பேரூந்துகள் வரிசையில் நிற்பதாலும் இந்த நிலை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று 2000 பேரூந்துகளை இயக்க முடியும் என்றும் தனியார் பேரூந்துகளுக்கு தலா 75 லீற்றர் டீசல் நேற்று லங்காம டிப்போ மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பேரூந்து கட்டண அதிகரிப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பேரூந்துகளை பயன்படுத்துவதால் பேரூந்து ஒன்றின் வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி லங்காம டிப்போ தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், 5,000 பேரூந்துகளில் 4,000 பேரூந்துகள் இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

மேலும், டயர், பேட்டரி பற்றாக்குறையால் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை, ஆனால் அடுத்த வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் 100 டிப்போக்கள் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நாளாந்த ஓட்டத்தில் கிட்டத்தட்ட 350 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பெட்டிகள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையால் சுமார் 10 எண்ணெய் போக்குவரத்து ரயில்கள் இயங்கவில்லை என்றும், அவை அனைத்தும் பயணிகள் போக்குவரத்து சேவை ரயில்வே அலுவலக ரயில்களை இயக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொது மேலாளர், ரயில்வே துறையிடம் போதிய எரிபொருள் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு ரயில்களின் இயக்கத்தை சீர்குலைக்க முயன்ற ரயில் ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக பொது மேலாளர் மேலும் தெரிவித்தார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

வழமைக்கு திரும்பும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

ஈஸ்டர் தாக்குதலால் மாட்டிக்கொண்ட மைத்திரி – 2033வரை அவகாசம் கோருகின்றார்!

CEYPETCO விலையை உயர்த்தினால் போக்குவரத்துத் துறை தாங்காது