உள்நாடு

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் சேமிப்பக டெர்மினல்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (28) முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருளை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 3,380 பேர் பூரணமாக குணம்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது