உள்நாடு

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது

(UTV | கொழும்பு) –  யூரியா உரத்தை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாமதம் காரணமாக மற்றுமொரு கப்பல் ஜூலை 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஓமானில் இருந்து இலங்கைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்ட உரத் தொகுதியொன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

உரங்களின் தரம் மூன்று தரப்பினரால் ஆராயப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

அக்குரணை உணவகத்தில் தீ விபத்து – காரணம் வௌியானது ?

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு