விளையாட்டு

கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய பாபர் அசாம்

(UTV | முல்தான்,பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பார்பர் அசாம் கிரிக்கெட் சட்டத்தை மீறியுள்ளார்.

கிரிக்கெட் குறியீட்டின் விதி 28.1 இற்கு அமைய விக்கெட் காப்பாளரை தவிர வேறு எந்த காப்பாளரும் கையுறைகள் அணியக்கூடாது என்றும், எந்த விக்கெட் காப்பாளரும் தனது விரல்கள் அல்லது கைகளுக்கு ஏதேனும் பாதுகாப்பு அணிய வேண்டும் என்றால் நடுவரின் தீர்மானத்திற்கு ஏற்பவே அணிய வேண்டும் என்றும் உள்ளது.

நேற்று (10) நடைபெற்ற பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் போட்டியின் போது பார்பர் அசாம் விக்கெட் காப்பாளர் கையுறை அணிந்து உரிய விதிமுறைகளை மீறியதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி நடவடிக்கைகளுக்காக ஐந்து போனஸ் புள்ளிகள் வழங்கப்பட்டன.

இது மிகவும் அரிதான நிகழ்வு என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Related posts

இரண்டாவது டி-20 போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு