உள்நாடு

ஜூன் 15 : பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 15 ஆம் திகதி மாவட்ட மற்றும் நிறுவன மட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சவின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையாக மக்கள் மீது வரி விதித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் பிற போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் விற்கப்பட்டதை விரைவில் அரசாங்கம் தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கமானது தமது தனிப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்திற்குள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமரசிங்க, அவர்கள் மக்களின் பொறுமையை சோதிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை