உள்நாடு

சீனாவில் இருந்து மேலும் 300 மில்லியன் யுவான் மானியம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் எரிபொருள் வழங்குவதற்காக சீனா 300 மில்லியன் யுவான்களை மானியமாக வழங்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த 300 மில்லியன் யுவான் நிதியுதவியுடன், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை வழங்கிய மொத்த உதவி 500 மில்லியன் யுவான் அல்லது 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

கெஸ்பேவ ஹோட்டல் உரிமையாளர் கொலை – 2 பேர் கைது

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை