உள்நாடு

மே 1,3 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் A முதல் W வரையான வலயங்களில் இன்றைய தினம் 3 மணி நேரமும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

கொழும்பு நகர்ப்பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான 3 மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது

இதேவேளை, நாளையும், எதிர்வரும் மூன்றாம் திகதியும், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் இரண்டாம் மற்றும் நான்காம் திகதிகளில், A முதல் W வரையான வலயங்களில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகும்.

இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

Related posts

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும்!

கல்வி அமைச்சின் அறிவித்தல்

சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறையில்