உள்நாடு

அரசாங்கம் பொதுமக்களை முட்டாள்கள் போல் நடத்துகிறது – ஐ.தே.க

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் நெருக்கடியில் இருந்து பொதுமக்களை திசை திருப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு காணத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, அண்மையில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறித்தும் கருத்து வெளியிட்டார்.

“அரசாங்கம் பொதுமக்களை முட்டாள்கள் போல் நடத்துகிறது, இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதன் மூலம் நாட்டில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் தீர்த்து வைப்பதாக நினைக்கிறார்கள். இது நம்மை திசை திருப்பும் முயற்சி மட்டுமே. டொலர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மத்திய வங்கி ஆளுநரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கினால், அமைச்சரவை மாற்றம் என்பது டாலர் நெருக்கடிக்கு தீர்வாகாது.

நாளாந்தம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்ற போதிலும் அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்குவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகக் கோரி மக்கள் வீதியில் இறங்குவார்கள்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் – தேசபந்து தென்னக்கோன்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை