உள்நாடு

நாளைய தினம் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளைய தினம் தனியார் பஸ் சேவைகள் தடைப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பகலில் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதன் விளைவாக தற்போது பஸ் தொழிற்சங்கம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபை எரிபொருளை வழங்கும் என எதிர்பார்த்ததாகவும் எனினும் இதுவரையில் தமக்கு எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஒரு நாள் முழுவதும் எரிபொருள் வரிசையில் இருக்க டிரைவருக்கு ரூ.2,500 மற்றும் நடத்துனருக்கு ரூ.1,500 கட்டணம் செலுத்துவதால், பேருந்துகளை வீட்டிலேயே விடுவது அதிக லாபம் என்று அவர் கூறினார்.

தற்போது இயக்கப்படும் பேருந்துகளிலும் நாளை எரிபொருள் தீர்ந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜேரத்ன கூறுகையில், பஸ்கள் நாள் முழுவதும் வரிசையில் நின்று எரிபொருள் இல்லாமல் புறப்படும் சம்பவங்கள் பதிவாகியதாகவும், சிலவற்றில் குறைந்த அளவிலான எரிபொருளை மட்டுமே பெறுவதாகவும் கூறினார்.

Related posts

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்

இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தலுக்கு

கொழும்பு – மும்பை நேரடி விமான சேவையை ஆரம்பம்!