உள்நாடு

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து இருவரும் கலந்துரையாடுவார்கள் என வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பேராயர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சர்வதேச உதவியை நாட கடந்த 24 ஆம்திகதி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார்.

Related posts

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி” – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை – சந்திரசேன.