அரசியல்உள்நாடு

20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் சொகுசு கார் மோதி விபத்து

editor

எண்ணெய் விலை குறைந்தது