அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளினால் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த வருடத்தை விட அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 37. 6 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் அது 6.3 வீத அதிகரிப்பு என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 768.2 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாகவும் அந்த கையில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 11.7வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.