உள்நாடு

இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில்

(UTV | கொழும்பு) – நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையெனவும், குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

Related posts

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமத்தில்

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில் சாதனை