உள்நாடு

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கான தீர்வு பெரும்பாலும் இன்றைய தினம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையில் நேற்று (22) இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

வைத்தியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 24 மணிநேரம் கால அவகாசத்தை குறித்த சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் சுகாதார அமைச்சர் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சு மட்டத்தில் இன்று கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது பெரும்பாலும் வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரிய கடிதத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!

பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகள் நவம்பரில்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது