உள்நாடு

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபா கடன் எல்லையை 400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும், கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக அரச வருமானம் குறைவடைந்தமை, சுகாதாரத் துறையின் செலவு, வருமானத்தை இழந்தவர்களுக்கான நிவாரணம் வழங்கல் மற்றும் தமது வருமானத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இழக்கப்பட்டமையால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு நேரிட்டமை, இதர துறைகளில் ஏற்பட்ட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இவ்வாறு கடன் எல்லையை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக நிதியமைச்சரின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரங்கள்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை