உள்நாடு

சிறைக்கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி

(UTV | கொழும்பு) – அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

‘கோட்டாபயவுக்கு இலங்கையிலிருந்து செல்ல இந்தியா உதவவில்லை’

இராஜினாமாவுக்கு தயாராகும் விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்