உள்நாடு

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 ஒழிப்பு திட்டத்தின் கீழ் பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் உள்பட பல பகுதிகளில் பல்வேறு முறைகேடுகள் பற்றிய செய்திகள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, இனிமேல், ஃபைசர் தடுப்பூசி இராணுவத்தின் தலைமையில் வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சரியான நடைமுறைக்கு வெளியே தடுப்பூசி பெற தகுதியற்ற எந்தவொரு நபருக்கும் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்று அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

டக்ளஸின் அலுவலகத்திற்கு சென்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!

‘அவரவர்களுக்கிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்’