கிசு கிசு

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் : வைத்திய அறிக்கை வெளியானது

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனரான மொஹமட் ஷியாப்தீன் இஸ்மத்தீன் இனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்த யுவதி, தற்போதும் கன்னிப் பெண்ணாக இருப்பதாக நீதிமன்று முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த இஷாலினி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஸ்மத்தீன், 2016ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ராமசந்திரன் ஷஷி குமாரி எனும் யுவதியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிசாரினால் நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த யுவதி தொடர்பிலான வைத்திய அறிக்கையில், குறித்த யுவதியின் கன்னி ஊடுருவலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கை கடந்த 16ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

அதன்படி, குறித்த சந்தேக நபர் 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சீ.ராகல ஆகஸ்ட் 16ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்ற பொறுப்பில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இஷாலினி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக செய்திகளை வெளிப்படுத்திய ஊடகங்கள், நீதிமன்றினால் அவரை பிணையில் விடுவித்தமைக்கான காரணத்தினை வெளிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

police info

Related posts

தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள்

மகனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த தாய்…

தாஜுடீனின் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் வாய்திறந்தார்