உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை குறித்தக் குற்றச்சாட்டில் 54,612 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாண எல்லை ஊடாக பயணிக்க முற்பட்ட 2411 பேரும் 1220 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, 479 பேர் 361 வாகனங்களுடன் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

புரேவி வலுவிழந்தது

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்