உள்நாடு

தடுப்பூசி குறித்து மேல்மாகாண மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ​மேல் மாகாணத்தில் கடும் நோயுடன் கூடியவர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 1906 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து மக்கள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் மரணம்

தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் புதிய திருப்பம்!

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு