உள்நாடு

இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இவ்வறிக்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிக மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்