உள்நாடு

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணை உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் குறித்த குழு கடந்த 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி இன்றும் முன்னிலை

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் பயணிப்போருக்கு மறு அறிவித்தல் வரையிலான அறிவிப்பு