வணிகம்

சந்தையில் விஷம் கலந்த மிளகாய்த்தூள்

(UTV | கொழும்பு) –  விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் வேலைத்திட்டமொன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த கோரிக்கையை அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த விடுத்துள்ளார்.

இவ்வாறான வேலைத்திட்டமொன்று இல்லாமை காரணமாகவே, உடம்புக்கு ஒவ்வாத பல உணவு பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, உணவு இறக்குமதியின் போது, பால் மா மற்றும் காய்ந்த மிளகாய் இறக்குமதிகளின் போதும், இவ்வாறான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

சீனாவிடமிருந்து 1500 மில்லியன் டொலர் கடன் பெறப்படும்

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு தயாராக உள்ளது!