உள்நாடு

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTV | கொழும்பு) –  கல்கிஸையில் இருந்து காலி வீதியூடாக சுதந்திர சதுக்கம் வரையில் இன்று(25) பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவர்த்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு அவருடைய உடல் கல்கிஸ்ஸ தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணி ஊடாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே வாகன சாரதிகள் குறித்த தருணத்தில் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அநுரவுடன் டீல் – சஜித்

editor

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது