உலகம்

AstraZeneca தடுப்பூசி தொடர்பில் WHO அறிவிப்பு

(UTV |  ஜெனீவா) – Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசி பயன்பாட்டினை நிறுத்துவதற்கு எந்தவிதமான அடிப்படை காரணமும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் ஏற்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் astrazeneca கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்

கொரோனா: அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம்

இலங்கையில் பிடிக்கப்படும் படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்.