உள்நாடு

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு இதற்கு தேவையான ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில், வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மருத்துபீட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பிரதம மந்திரி கொள்ளுப்பிட்டி பள்ளிசாசலுக்கு விஜயம் நேற்று மீலாத் விழாவில் கலந்துகொண்டார்.

 இன்று கொண்டுவரப்படும் முட்டைகளின் மாதிரி திங்கட்கிழமை….

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார வழிகாட்டல் கோரல்