உலகம்

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 7 பேர் பலி

(UTV |  இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் மஜினே நகரில் இன்று காலை ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகிய நிலநடுக்கத்தினால் 7 பேர் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலநடுக்கத்தினால் 637 பேர் காயமடைந்துள்ளதுடன், 60 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று அதிகாலை காலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாக மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

WhatsApp இற்கு புதிய வசதிகள்

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுவெல்லா இராஜினாமா