உள்நாடு

ரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும்

(UTV | கொழும்பு) – நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்காக குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 06 மாதங்களுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி சட்டரீதியாக இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா குறிப்பிட்டார்.

எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தண்டனையை இடைநிறுத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி நீக்கப்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறையில்

உயர் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு!