உள்நாடு

உக்ரேனிய சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய முதற்தடவையாக உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர்.

இதன்படி 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய பிரஜைகள் மத்தள விமான நிலையத்தில் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விசேட திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் சுற்றுலாப்பயணிகளை கருத்திற் கொண்டு நாட்டின் விமான நிலையங்களின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தடுப்பூசியினால் முழுமையாக குணமடையாது

சீதுவை பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

கொவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்