உள்நாடு

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

(UTV | கொழும்பு) –  1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் உள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மக்களுக்கும் பிறப்பிலேயே உள்ள அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான உரிமை மற்றும் சமத்துவத்தை உறுதிபடுத்துவதே இத்தினத்தை பிரகடனப்படுத்துவதன் நோக்கமாகும் என சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகளாவிய மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் தெளிவூட்டல், மேம்படுத்தல் மற்றும் மனித உரிமை நிலையை மேம்படுத்தல் என்பன மனித உரிமை தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் இலங்கை 1955ஆம் ஆண்டு மனித உரிமை சாசனத்தை ஏற்றுக் கொண்டது.

நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம் ஊடாக சட்டபூர்வ உரிமையாக அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைக் கொள்கைகளை மனித உரிமை என்பதற்குள் உள்ளடக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைக்கமைய நபரொருவரின் மதம், இனம், வதிவிடம், தோலின் நிறம், சொத்துக்கள் ஆகிய எதுவும் அதில் தாக்கம் செலுத்தாது என அவர் மலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமையை பாதுகாப்பதன் ஊடாக தனிநபர் வளர்ச்சி போன்றே உலகம் என்ற ரீதியில் ஐக்கியத்துடன் முன்னோக்கி செல்ல முடியும். அத்துடன், மனித உரிமைகள் தினம் வெறும் தத்துவ பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படாத நடைமுறை பயன்பாட்டு முக்கியத்துவ அடையாளம் காணப்பட்ட ஒன்றாக அமைய வேண்டும்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இலங்கை வாழ் மக்களின் மனித உரிமையை பாதுகாக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமையை பாதுகாத்து, ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கட்டுப்பட்டிருந்தோம். சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கையின் ஊடாக அனைத்து மக்களதும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டினதும், குடிமக்களினதும் நற்பேறுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் மனித சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில் அடிப்படை உரிமைகள் போன்றே தேவைகளுக்காகவும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.

உரிமைகளை அனுபவிப்பது போன்றே, அதனுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். உலகளாவிய ரீதியில் முகங்கொடுத்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போன்றே, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றி கொண்டு, தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு இம்முறை மனித உரிமைகள் தினத்தில் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை”

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

நாடு முழுவதும் மழையுடனான வானிலை