உள்நாடு

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பொலிஸ் பிரிவுகளின் சில பகுதிகள் இன்று (30) அதிகாலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, கரையோர மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாவட்டததின் முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் பொரளை பொலிஸ் பிரிவில் வானாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கம்பஹாவில் வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்குளி பொலிஸ் பிரிவின் ரன்திய உயன வீடமைப்புத் தொகுதி மற்றும் பர்குசன் வீதியின் தெற்கு பிரதேசங்கள் இன்று (30) அதிகாலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் “லக்செத செவன” வீடமைப்புத் தொகுதி, சாலமுல்ல மற்றும் விஜயபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று(30) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 71பேர் கைது

ரணில் பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர் அல்ல, நாட்டின் வேட்பாளர்

அரசுக்கு எதிரான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பேராயரும் பங்கு